கென்யாவில் கடத்தப்பட்ட இரண்டு இத்தாலிய அருட்சகோதரிகள் விடுதலை செய்யப்படுவதற்குச் செபிக்க
அழைப்பு
03,பிப்.2009. கென்யாவில் கடந்த நவம்பரில் கடத்தப்பட்ட இரண்டு இத்தாலிய அருட்சகோதரிகள்
விடுதலை செய்யப்படுவதற்குச் செபிக்குமாறு அந்நாட்டு நைரோபி கர்தினால் ஜான் நுயே அழைப்புவிடுத்தார்.
இக்கன்னியர்கள்
உயிரோடு இருக்கின்றனர், இவர்களின் விடுதலைக்காக அரசியல் தூதரக வழியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன என்றும் கர்தினால் கூறினார்.
67 வயதாகும் அருட்சகோதரி கத்ரீனா ஜிரவ்தோ,
61 வயதாகும் அருட்சகோதரி மரிய தெரேசா ஒலிவியெரோ ஆகிய இருவரும் கடந்த நவம்பர் பத்தாம்
தேதி சொமாலிய எல்லைப்புறத்தில் ஆயுதம் தாங்கிய மனிதர்களால் கடத்தப்பட்டனர்.