அமெரிக்க ஐக்கிய நாட்டில் அருட்சகோதரிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணத்தைக்
கண்டறிய வத்திக்கான் முயற்சி
03,பிப்.2009. அமெரிக்க ஐக்கிய நாட்டில் கடந்த நாற்பது ஆண்டுகளில் அருட்சகோதரிகளின் எண்ணிக்கை
குறைந்து வருவதற்கான காரணத்தைக் கண்டறிய வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆய்வைத் தொடங்கியுள்ளது.
இவ்வாய்வை
நடத்துவதற்கு இயேசுவின் திருஇதய அப்போஸ்தலர்கள் சபையின் அதிபர் ததர் மேரி கிளேர் மில்லேயாவை
நியமித்துள்ளார் திருப்பீட துறவற சபைகளுக்கான பேராயத் தலைவர் கர்தினால் பிரான்ஸ் ரோட்.
அமெரிக்க
ஐக்கிய நாட்டில் ஏறத்தாழ நானூறு பெண் துறவற சபைகள் பணியாற்றுகின்றன.