2009-02-02 20:45:50

அஸ்ஸாம் மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள் . 020209.


அஸ்ஸாம் மாநிலத்தின் மஜூலிப் பகுதியில் உள்ள கமலபாரி நகரில் அங்குள்ள சிலர் குருக்களிடமும் , அருள் சகோதரிகள் , மற்றும் கிறிஸ்தவர்களிடம் தாக்கப்பட்டுள்ளனர் . இது கடந்த சனவரி 24 ஆம் தேதி நடந்துள்ளது . வழிபாடு நடந்து கொண்டிருந்தபோது விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தேவையில்லாத காரணத்துக்காகச் சிலர் தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளனர் . இந்நிகழ்ச்சி அங்குள்ள கிறிஸ்தவர்களைப் பெரிதும் பாதித்துள்ளது . மனித மாண்புக்கும் , மனித உரிமைகளுக்கும் எதிரான இந்த வன்முறையை கிறிஸ்தவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். இந்நிகழ்ச்சி குருப்பட்ட நிகழ்ச்சி ஒன்றுக்குப் பிறகு தத்தமது ஊர்களுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போதும் தாக்கப்பட்டுள்ளனர் . அங்கு அமைதியாக வாழ்ந்து வந்த பல சமயத்தினருக்கு இந்நிகழ்ச்சி அதிர்ச்சியைத் தந்துள்ளது .








All the contents on this site are copyrighted ©.