இம்மாதம் 31 ஆம் தேதி புனித
பூமியில் அமைதி நிலவ 24 மணி நேர செப ஆராதனை நடக்கிறது . உலக அமைதிக்காக உலகின் 400 க்கும்
அதிகமான நகரங்களில் திருப்பலி நிறைவேற்றி செப வழிபாடு நடக்கிறது. எருசலேத்தில் உள்ள புனிதக்
கல்லறை பேராலயத்திலும் , காசாவில் உள்ள திருக்குடும்ப ஆலயத்திலும் சிறப்புப் பிரார்த்தனைகள்
நடக்கின்றன . உலகம் முழுவதும் நடக்க உள்ள இந்த அமைதிப் பிரார்த்தனைக்கு கிறிஸ்தவசபைகள்
ஏற்பாடு செய்துள்ளன . இந்தியாவில் அண்ணல் காந்தி மறைந்த இந்த வெள்ளியன்று நாம் அமைதிக்காக
செபித்தோம் .