இரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையோடு தொடர்ந்து சமயக்கலந்து உரையாடல்
கொள்வது அவசியம்
என்கின்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . பல தடைகள் வந்தாலும் கலந்து உரையாடுவதைத்
தொடர வேண்டும் என தம்மைச் சந்தி்க்க வந்த இரஷ்ய ஆயர்களுக்குத் திருத்தந்தை அறிவுரை வழங்கினார்
. இரஷ்ய கத்தோலிக்க ஆயர்கள் இந்த வாரம் வியாழன் திருத்தந்தையை வத்திக்கான் மாளிகையில்
சந்தித்தனர் . இரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையோடு இணைந்து தற்கால முக்கியமான கலாச்சார
மற்றும் நன்னெறியை அடுத்த சவால்களைச் சந்திக்க வேண்டும் எனத் திருத்தந்தை அறிவுறுத்தினார்
. மனித மாண்பையும் , மனித வாழ்வையும் பாதுகாக்க வேண்டும் என மேலும் அத்லீமினாச் சந்திப்புக்கு
வந்த இரஷ்ய ஆயர்களுக்குத் திருத்தந்தை தெரிவித்தார் . ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையின் பிதாப்பிதாவாக
முக்கியமான பொறுப்பை ஏற்றிருக்கும் மெட்ராபாலிட்டன் கிரில்லுக்கு மீண்டும் வாழ்த்துத்
தெரிவித்த திருத்தந்தை கத்தோலிக்கத் திருச்சபையும் , ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையும் சகோதர
அன்பு , ஒற்றுமை ஆகிய பாதையில் வழி நடக்க ஆண்டவர் அருள்புரியுமாறு இறைவனிடம் மன்றாடினார்
.