மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்கள் படும் துயரங்களைத் தீர்க்க ஆயர்கள் குழு தீர்மானித்துத்
திட்டமிட அழைப்பு விடுத்துள்ளனர் ஈராக்கிய ஆயர்கள் . இந்த 22 ஆம் தேதி வியாழக்கிழமை அவர்கள்
அத்லீமினாச் சந்திப்புக்காகத் திருத்தந்தையை அவரது வத்திக்கான மாளிகையில் சந்தித்தனர்
. அதுபோது பேசிய கல்தேயத் திருச்சபையின் கிர்க்குக் மறைமாவட்டப்பேராயர் லூயி சாக்கோ ஈராக்கில்
கிறிஸ்தவர்கள் சந்திக்கும் சவால்களைச் எதிர்கொள்ள நல்லமுறையில் தற்கால நிலைக்கும் வருங்காலத்துக்கும்
திட்டமிடவேண்டியது அவசியம் என்றார் . எல்லா ஆயர்களும் கலந்து கொள்ளும் ஆயர் குழுவில்
வத்திக்கானின் சிறப்பான வழிகாட்டுதலோடு பிரச்சனையைத் தீர்க்க வழிகாணவேண்டும் எனவும் கூறினார்
. இதற்கு நாம் சரியாகத் திட்டமிடவில்லையென்றால் புனித பூமியாக இருக்கும் பகுதியைவிட்டு
கிறிஸ்தவர்கள் மெதுவாக வெளியேறிவிடுவார்கள் என்றும் பேராயர் சாக்கோ கருத்து வெளியிட்டார்
.