2009-01-23 18:06:59

அகில உலகச் சமூகத் தொடர்பு நாள்- திருத்தந்தையின் செய்தி. 2301


அகில உலக 23 ஆவது சமூகத் தொடர்பு நாளையொட்டி திருத்தந்தை செய்தி வழங்கியுள்ளார் . இந்நாள் இந்தியாவில் நவம்பர் மாதத்திலும் , இத்தாலியில் ஆண்டவர் விண்ணெழுந்த நாளுக்குப் பின்னரும் மற்ற நாடுகளில் வசதி்ப்படியும் கொண்டாடப்படுகிறது . திருத்தந்தையின் செய்தியில் புதிய தொடர்பு சாதனங்கள் காரணமாகப் புதிய உறவுகளுக்கு வழி பிறந்துள்ளது . இது பிறரைப் போற்றி மதிக்கும் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது . கலந்து உரையாடுவதற்கும் , நட்புக்கும் வழிசெய்கிறது என்னும் அடிப்படைக் கருத்துக்களைத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அழுத்தமாகக் கூறியுள்ளார் . புதிய தொடர்பு சாதனங்களால் உருவாகியுள்ள வளர்ச்சி காரணமாக உறவுகளிலும் புது சக்தி பிறந்துள்ளதாகத் திருத்தந்தை தெரிவித்துள்ளார் . இந்த வளர்ச்சியைச் இளையோர் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் எனத் திருத்தந்தை மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார் . மனித சமுதாயத்தைப் புரிந்து கொள்ளவும் , ஒருமைப்பாட்டை வளர்க்கவும் வாய்ப்பளிப்பதாகவும் திருத்தந்தை கூறியுள்ளார் . இந்தப் புதிய தொடர்பு சாதனங்கள் மனித சமுதாயத்துக்கு ஒரு அற்புதமான கொடை எனக் கூறிய திருத்தந்தை இதனை நாம் வாழ்வில் பின் தங்கியவர்களுக்கும் , பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கும் உதவிடப் பயன்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.