இலங்கையில் பொதுமக்கள் மீது அரசு குண்டு வீச்சு. 220109 .
இலங்கையின் வன்னிப் பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் அரசுத் தரப்பினரின் விமானப்படை
குண்டு வீசியதில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் . இடம் பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த
கிராமங்களைப் பாதுகாப்புக்குரிய இடம் எனக் கடந்த மாதம் அரசு அறிவித்திருந்தது . ஆனால்
அங்கெல்லாம் அரசுக்குச் சொந்தமான விமானப்படைத் தாக்குதல் நடந்துவருவது குழப்பத்தைக் கொடுத்துள்ளது
. இலங்கை அதிபர் இராஜபக்சேயிடம் ஜாப்னாவின் ஆயர் மேதகு தாமஸ் செளந்தர நாயகம் இலங்கையில்
நிலையான அமைதிக்கு வழிவகுக்குமாறும் , போர் தொடுப்பதை நிறுத்துமாறும் வேண்டுகோள் வைத்துள்ளார்
. வன்னிப்பகுதியில் உள்ள சுதந்திரபுரத்தில் கடும் சண்டைகள் நடந்து வந்தன . இவ்வாரம் அங்கு
போடப்பட்ட குண்டுகளால் 17 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் . பலர் காயமடைந்துள்ளார்கள் . அப்பகுதியில்
உள்ள தேவிபுரம் , உடையார்காடு , சுதந்திரபுரம் ஆகியவை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக
ஆசியச் செய்திச்சேவை கூறுகிறது . இதனை உடனே நிறுத்தவேண்டும் என அதிபரைக் கேட்டுக்கொண்ட
ஆயர் செளந்திரநாயகம் மக்களின் தேவைகளைத் தீர்க்க ஐ .நாடுகள் சபையினரோடு இணைந்து செயல்படுமாறு
வேண்டுகோள் விடுத்துள்ளார் .