இயேசு சபையின் தெற்கு ஆசியப் பகுதிக்குப் புதிய தலைவர். 220109 .
இயேசு சபைத் துறவறச் சபையின் தெற்கு ஆசிய மாநிலத் தலைவராக அருள் தந்தை எட்வர்ட் முடவசேரி
என்பவர் நியமனம் பெற்றுள்ளார் . இவர் கேரளத்தைச் சேர்ந்தவர் . இவர் முன்னர் ஹசாரிபாக்
இயேசுசபை மாநிலத்தின் தலைவராக இருந்துள்ளார் . 65 வயதாகும் இவர் தற்பொழுது டெல்லியில்
உள்ள இயேசுசபையின் வித்ய ஜோதி என்ற இறையியல் கல்லூரியின் இல்லத் தலைவராக உள்ளார் . இவர்
சென்னை, உரோம் ,மற்றும் அயர்லாந்தில் கல்வி பயின்றவர் . உளவியலில் சிறப்புப் பட்டம் பெற்றுள்ளார்
. தெற்கு ஆசியாவில் உள்ள இயேசு சபையின் 18 மாநிலங்களுக்கும் , 2 துணை மாநிலங்களுக்கும்
இவர் தலைமைத் தந்தையாக இருப்பார் . மே மாதம் 31 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார் . 2004 ஆம்
ஆண்டிலிருந்து தந்தை ஹெக்டர் டிசூசா, சேசு சபை இப்பொறுப்பில் இருந்தார் . இந்தியாவில்
5000 இயேசு சபையினர் உள்ளனர் . தமிழக இயேசு சபையில் 500 பேர் துறவு வாழ்வை மேற்கொண்டு
பணிசெய்து வருகின்றனர் . மற்றும் இலங்கை , நேபாளம் , ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தானிலும்
இயேசு சபையினர் பணி செய்து வருகின்றனர் . சென்னை இலயோலாக் கல்லூரி , திருச்சி புனித வளனார்
கல்லூரி , பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி , மதுரை அருளானந்தர் கல்லூரி இவற்றோடு
தமிழகத்தில் நூற்றாண்டு விழாக் கண்ட பல மேனிலைப் பள்ளிகளை நடத்துவதோடு , மக்களுக்குத்
தொண்டு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர் . இந்தியாவின் பல இடங்களில் உள்ள முன்னணிக்
கல்லூரிகளையும் , புகழ் பெற்ற மனித வள மேம்பாட்டுக்கான இரண்டு எம்பிஏ கல்லூரிகளையும்
நடத்தி வருகின்றனர் . பங்குத் தளங்களில் மக்களுக்கு சமய வாழ்வில் துணையாக இருந்து வருகின்றனர்
.