2009-01-21 11:26:22

கர்தினால் இரண்டாம் ஸ்தெஃபானோஸ் கட்டாஸ் இறைபதம் சேர்ந்தார்.


அலக்ஸாந்திரிய காப்டிக் ரீதி சபையின் முன்னாள் பிதாப்பிதா கர்தினால் இரண்டாம் ஸ்தெஃபானோஸ் கட்டாஸ் இச்செவ்வாயன்று இறைபதம் சேர்ந்தார்.

எகிப்தில் 1920ம் ஆண்டு பிறந்த இவர், 1944ல் குருவாகவும் 1967ல் ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். 2001ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர் 2006ம் ஆண்டில் திருச்சபை நிர்வாகப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

கடந்த வெள்ளியன்று தன் 89வது வயது நிறைவைக் கொண்டாடிய கர்தினால் இரண்டாம் ஸ்தெஃபானோஸின் மரணத்துடன் திருச்சபையில் கர்தினால்களின் எண்னணிக்கை 188ஆகக்குறைந்துள்ளது. இதில் 116 பேரே திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதிற்கு உட்பட்டவர்கள்.








All the contents on this site are copyrighted ©.