இயேசு மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள்
சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும்
நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே
இருந்தனர். இயேசு கை சூம்பிவரை நோக்கி, ' எழுந்து, நடுவே நில்லும் ' என்றார். பின்பு
அவர்களிடம், ' ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா?
எது முறை? ' என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள். அவர் சினத்துடன் அவர்களைச்
சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை
நோக்கி, ' கையை நீட்டும் ' என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது.
உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச்
சூழ்ச்சி செய்தனர்.