பின்லாந்து கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுவை சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
ஜன.19, 2009. பின்லாந்து நாட்டிலிருந்து உரோம் நகர் வந்துள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுவை
இன்று திருப்பீடத்தில் சந்தித்த பாப்பிறை 16ம் பெனடிக்ட், முழு ஐக்கியத்திற்கான அவர்களின்
பங்களிப்பிற்குத் தன் பாராட்டுதல்களை வெளியிட்டார்.
செபம் மற்றும் கலந்துரையாடல்
மூலம் கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுக்கள் வழங்கிவரும் பங்களிப்பை பாராட்டிய திருத்தந்தை, இப்பணியில்
பின்லாந்து மற்றும் சுவீடனின் லூத்தரன்-கத்தோலிக்க பேச்சுவார்த்தை அவையின் பணிகளைக் குறிப்பிட்டுக்
காட்டி பாராட்டினார்.
புனித பவுல் பிறந்ததன் இரண்டாயிரமாம் ஆண்டைக் கொண்டாடும்
நாம் அவரைப் போல் கிறிஸ்தவ ஒன்றிப்புக்காக நம்மை அர்ப்பணிப்பவர்களாகச் செயல்படுவோம் எனவும்
அழைப்புவிடுத்தார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்