2009-01-17 11:44:16

நைரோபியில் இத்தாலிய மறைபோதகர் கொல்லப்பட்டார்


ஜன.17,2009. கென்ய நாட்டு தலைநகர் நைரோபியில் இத்தாலிய மறைபோதகர் அருட்திரு ஜூசப்பே பெர்தாய்னா திருடர்களால் அடித்துக் கொல்லப்பட்டார் என்று மிஸ்னா மறைபோதக செய்தி நிறுவனம் அறிவித்தது.

நேற்று கொன்சலாத்தா மெய்யியல் நிறுவனத்தில் நுழைந்த இரண்டு திருடர்கள், அந்நிறுவன அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து 82 வயது நிரம்பிய அக்குருவை அடித்து வாயையும் கட்டி வைத்ததில் அவர் முச்சுத் திணறி இறந்தார் என்றும் அச்செய்தி நிறுவனம் கூறியது







All the contents on this site are copyrighted ©.