மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் 19 ஆவது ஆண்டறிக்கை. 160109.
மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் 19 ஆவது ஆண்டறிக்கை 90 நாடுகளில் நடைமுறையில் மனித
உரிமைகள் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது . வாஷிங்டனில் இருந்து
வெளிவரும் இச்செய்தியில் மனித உரிமைகள் மீறப்படும் நிலைமை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது
. அமெரிக்க அதிபர் புஷ் அவர்களின் ஆட்சி வெறும் போலி நடிப்பு என்றும் , ஐரோப்பிய கூட்டமைப்பு
மனித உரிமைகளைக் காக்க வேண்டிய பொறுப்பை உதறிவிட்டதாகவும் வர்ணித்துள்ளது . சீனா , இந்தியா
, ரஷ்யா , போன்ற நாடுகளும் மனித உரிமைகளுக்கு முதலிடம் கொடுப்பதாகக் கூறிக்கொண்டு ஆணவப்போக்குக்குரிய
சர்வாதிகார ஆட்சி நடத்துவதாகக் கூறியுள்ளது .