ஐரோப்பிய, அமெரிக்க ஆயர்கள் காஜாப்போரை நிறுத்த அழைப்பு .150109 .
புனித பூமியில் நடந்துவரும் போரை நிறுத்த உதவுமாறு அகில உலகத்தினரையும் வேண்டுகின்றனர்
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஆயர்கள் . இந்தப் போரை நிறுத்துவதோடு புனித தலத்தில் நடக்கும்
சண்டையை முடிவுக்குக் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் . புனித பூமியில் உள்ள திருச்சபைக்கு
உதவுமாறு 1998 இல் அமைக்கப்பட்ட ஆயர்கள் மன்றத்தின் உறுப்பினர்கள் இந்த மாதம் 15 ஆம்
தேதி செய்தித் தொடர்பாளர்களுக்குச் செய்தி வெளியிட்டுள்ளனர் . அவர்களுடைய செய்தியில்
இஸ்ரயேலையும் பாலஸ்தீனத்தையும் வற்புறுத்தி நீதியான அமைதியைக் கொண்டுவந்து இஸ்ரயேலுக்குப்
பாதுகாப்பும் பாலஸ்தீனத்துக்கு வளம்பெறக்கூடிய நாட்டினை அமைத்துக்கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்
. இதுபற்றி அமெரிக்க ஆயர்குழுவின் துணை ஆயர் ஜெரால்டு கிகானாஸ் கத்தோலிக்கச் செய்தியாளர்களுக்குச்
செய்தி வழங்கியபோது இருதரப்பின் நிலையையும் சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ,
ஒரு பக்கம் சார்பாக இருந்துவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார் . போரைத் தொடர்வது முடிவில்லாத
முறையில் நடக்கக் கூடியதாகிவிடும் என எச்சரிக்கை விடுத்தார் .