காசாவில் அப்பாவி மக்களின் வாழ்வு பாதுகாக்கப்பட சர்வதேச செஞ்சிலுவை சங்கத் தலைவர் அழைப்பு
ஜன.14,2009. காசா வில் மனிதாபிமானப் பணியாளர்கள் தங்கள் பணிகளைச் செய்யவும் அப்பாவி மக்களின்
வாழ்வைப் பாதுகாக்கவும் வழி செய்யுமாறு அங்கு போரிடும் கழுக்களைக் கேட்டுள்ளார் சர்வதேச
செஞ்சிலுவை சங்கத் தலைவர் ஜேக்கப் கெல்லன்பெர்கர்
நேற்று காசா பகுதியைப் பார்வையிட்ட
கெல்லன்பெர்கர் சண்டையில் பலியாகும் அனைவரும் குறிப்பாக காயமடைகிறவர்கள் அவ்விடத்தை விட்டு
வெளியேற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட உதவுமாறு கேட்டுள்ளார்.
இவ்வளவு பேர் காயமடைந்திருப்பதைப்
பார்ப்பது சகித்துக்கொள்ளப்பட முடியாதது என்றும் இவர்களின் வாழ்வுக்கும் இவர்களைக் கவனிப்பவர்களின்
வாழ்வுக்கும் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் நிருபர்களிடம் கூறினார்.