திருமுழுக்கு நாம் நம் வாழ்வில் தொடர்ந்து இறையருளைப் பெறச் செய்கிறது - திருத்தந்தை
ஜன.12,2009. திருமுழுக்கு, மிகப் பெரிய காரியம், இது நாம் நம் வாழ்வில் தொடர்ந்து இறையருளைப்
பெறச் செய்கிறது என்று ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட்.
ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான
விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவின் திருமுழுக்கு விழா சிறப்பிக்கப்பட்டதைக்
குறிப்பிட்டு, கிறிஸ்துவின் திருமுழுக்கு அவரது பொது வாழ்வில் நடைபெற்ற முதல் செயல்,
இதனை நான்கு நற்செய்தியாளர்களுமே விவரித்துள்ளனர் என்றார்.
இந்நிகழ்வின் போது,
என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று வானத்திலிருந்து
ஒலித்த வார்த்தைகளில் நித்திய வாழ்வின் இயல்பு வெளிப்படுத்தப்பட்டது, இது, இயேசு வாழ்ந்து
வெளிப்படுத்தி நமக்குத் தந்த கடவுளுடனான மகன் உறவாகும் என்றார் அவர்.
அன்பு நண்பர்களே,
திருமுழுக்கு எனும் கொடை எவ்வளவு பெரியது, இதனை நாம் முழுமையாக உணர்ந்தால் நமது வாழ்வு
தொடர்ந்து இறையருளைப் பெறும் வாழ்வாக மாறும் என்று கூறினார் திருத்தந்தை.