ஒரிசாவின் காந்தமாலில் கற்பழிக்கப்பட்ட சகோதரி குற்றவாளிகளை அடையாளம் காட்டினார் . 060109
ஒரிசாவின் வன்முறையின்போது ஆகஸ்ட்மாதம் 25 ஆம் தேதி கற்பழிக்கப்பட்ட அருள்சகோதரி நான்கு
மாதங்களுக்குப் பிறகு கற்பழித்த குற்றவாளிகளை அடையாளம் காட்டியுள்ளதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்
. கட்டாக்கிற்கு அருகில் உள்ளது சைளத்வார் சிறை . குற்றவாளிகளாக 10 பேர் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தனர்
. ஆனால் 80 பேர் அவர்களோடு சகோதரிக்கு முன்னர் வரிசைப்படுத்தப்பட்டனர் . 90 நிமிடம் நடந்த
அடையாளம் காட்டும் நிகழ்ச்சியில் சகோதரி இருவரை அடையாளம் காட்டியுள்ளார் . கட்டாக்கின்
துணை நீதிமன்ற நீதிபதி பி.கே. தாசும் உடனிருந்தார்.