இந்தியாவின் இலத்தீன் கத்தோலிக்க ஆயர்குழுவின் பொதுக்குழு அமர்வு.060109
இந்தியாவின் இலத்தீன் கத்தோலிக்க ஆயர்குழுவின் 21ஆவது பொது அமர்வை வரும் பிப்ரவரி 12-
18 தேதிகளில் மைசூர் மாவட்டத்தில் உள்ள பிரபோபானா என்னுமிடத்தில் நடத்தவுள்ளது. இந்த
அமர்வின் மையக்கருத்தாக இறைவாக்கு இந்திய மக்களின் வாழ்வுக்கு ஊற்று என்பது இருக்கும்
. இந்தக் கூட்டத்தை வத்திக்கான் திருப்பீடத்தின் இந்தியாவுக்கான தூதர் பேராயர் பேத்ரோ
லோப்பஸ் குவிண்டானா பிப்ரவரி 12 ஆம் தேதி திருப்பலி நிறைவேற்றித் திறந்து வைப்பார் .
பிப்ரவரி 15 மாலை 5.00 மணிக்கு எல்லா ஆயர்களும் இணைந்து கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுவார்கள்
. மற்ற குருக்களும் , இறைமக்களும் இதில் கலந்து கொள்வார்கள் . இம்மாமன்றத்தின் தலைவர்
மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் .