2009-01-05 14:59:31

தான் புற்று நோயிலிருந்து விரைவாக குணம் பெற விசுவாசிகளின் செபம் உதவியதாக கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் கூறுகிறார்


ஜன.05,2009. தான் புற்று நோயிலிருந்து விரைவாக குணம் பெற விசுவாசிகளின் செபம் உதவியுள்ளதாக தன் நன்றியைத் தெரிவித்துள்ளார் மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ்.

வயிற்றுப் புற்று நோய் அறுவை சிகிச்சைக்குப் பின் தன் பணிகளைத் துவக்கியுள்ள கர்தினால் கிராசியாஸ், விசுவாசிகளின் தொடர்ந்த செபம் தன்னை விரைவில் குணப்படுத்தும் எனத் தான் அறுவை சிகிச்சைக்கு முன்னரே நம்பியதாக உரைத்தார்.

தற்போது அனைத்து விசுவாசிகளும் இணைந்து நன்றியின் செபத்தை இறைவனுக்கு எழுப்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் அவர்.

வயிற்றுப் புற்று நோயை ஆரம்ப காலத்திலேயே கண்டு கொண்டதைத் தொடர்ந்து கர்தினால் கிராசியாஸ் அமெரிக்க ஐக்கிய குடியரசின் வாஷிங்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.








All the contents on this site are copyrighted ©.