கென்யாவில் அனைவருக்கும் உணவு கிடைக்க வழி செய்ய கர்தினால் ஜான் நுயெ அழைப்பு
ஜன.03,2009.ஆப்ரிக்க நாடான கென்யாவில் நாட்டிற்குள்ளே புலம் பெயர்ந்துள்ள மக்களுக்கு
நல்வாழ்வை உருவாக்குதல், அனைவருக்கும் உணவு கிடைக்க வழி செய்தல், புதிய அரசியல் அமைப்புக்கு
ஆவன செய்தல் ஆகியவைகளுக்கு முன்னுரிமை கொடுக்குமாறு அந்நாட்டு அரசியல் தலைவர்களுக்கு
அழைப்புவிடுத்துள்ளார் கென்ய கர்தினால் ஜான் நுயெ.
2009ம் ஆண்டுக்கென கர்தினால்
ஜான் நுயெ வெளியிட்டுள்ள செய்தியில் கென்ய மக்கள் அனைவருக்கும் உணவு கிடைக்க வழி செய்யுமாறு
அந்நாட்டு அரசியல் தலைவர்களைக் கேட்டுள்ளார்.
2007ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி
வெளியான தேர்தல் முடிவுகள் கடந்த ஆண்டில் வன்முறைகள் இடம்பெறக் காரணமாயின என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
இவ்வன்முறையில் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் நாட்டிற்குள்ளே
புலம் பெயர்ந்தனர், ஆயிரக்கணக்கான டாலர் மதிப்புடைய சொத்துக்கள் அழிக்கப்பட்டன என்றுரைக்கும்
கென்ய கர்தினாலின் செய்தி கென்ய மக்கள் இத்தகைய வன்முறைகளில் ஒருபோதும் ஈடுபடாதிருக்கவும்
வலியுறுத்தியுள்ளார்