2009-01-03 15:50:35

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்கான ஸ்பெயின் ஆயர்களின் செய்தி


ஜன.03,2009. ஜனவரி 18 முதல் 25 வரை கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு ஒன்றிப்பு கடவுளின் கொடை என்ற தலைப்பில் ஸ்பெயின் ஆயர்கள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

விசுவாசிகளின் கையிலுள்ள ஒரே ஆயுதம் செபம் என்று குறிப்பிடும் அச்செய்தி, அன்பு மற்றும் நீதியின் பாதையை அனைவரும் கடைபிடிப்பதற்குச் செபிக்குமாறும் அழைப்புவிடுக்கிறது.

கிறிஸ்துவைப் பின்பற்றும் அனைவரும் திருமுழுக்கின் மூலம் இறைமக்களாகவும் ஒரே திருச்சபையின் உறுப்பினர்களாகவும் ஆகிறார்கள் என்றுரைக்கும் அச்செய்தி பிரிவினைவாதக் குழுக்களின் ஆரம்பமும், போலி விசுவாசமும் வழிபாடுகளும் உண்மையான கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு முரணான செயல்களாக இருக்கின்றன என்றும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.