2009-01-02 16:11:46

விடுதலைப் புலிகளின் தலைமையிடத்தைப் பிடித்துவிட்டதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம் . 020109 .


கடந்த சில பத்து ஆண்டுகளில் முதல் முறையாக இலங்கை இராணுவம் கிளிநொச்சிப் பகுதிக்குள் சென்றுள்ளதாகத் தெரிகிறது . கிளிநொச்சியின் இரயில் நிலையத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக இராணவத்தின் தலைமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . தமிழ் விடுதலைப் புலிகள் இது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை . வியாழன் இரவு புலிகள் வெளியிட்ட செய்தியில் மேலும் 5 பொதுமக்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர் . கிளிநொச்சி - புலிகளுக்கு முக்கியமான இடமாக இருந்து வந்தது . இரு தரப்பினரும் இலங்கையின் வடக்கில் எதிர்த்தரப்புக்கு பலத்த சேதங்களை உண்டுபண்ணியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்







All the contents on this site are copyrighted ©.