2009-01-02 16:15:01

ஜனவரி மாதத்துக்கான திருத்தந்தையின் கருத்துக்கள் - 020109


ஜனவரி மாதத்துக்கான திருத்தந்தையின் கருத்துக்கள் குடும்ப வாழ்வு பற்றியும் கிறிஸ்தவ சபைகளின் ஐக்கியம் பற்றியும் முக்கியமாகச் செபிக்க அழைப்பு விடுக்கின்றன . குடும்பங்கள் கத்தோலிக்க இறைப்பற்றை தங்கள் வாழ்வால் அறிவிக்க வேண்டும் என்பதற்காகத் திருத்தந்தை சிறப்பாக வேண்டுகிறார் . இம்மாத செப அப்போஸ்தலக் கருத்து குடும்பங்கள் பிறரன்பைப் பகிர்வதற்காகவும் , மனித வளமேம்பாட்டை அதிகப்படுத்துவதற்காகவும் , விசுவாசத்தை அறிக்கையிடுவதற்காகவும் செபிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது . இந்தமாத நற்செய்தி அறிவிப்புக் கருத்தாக பிரிவினைக் கிறிஸ்தவ சமயங்களின் ஐக்கியத்துக்காக செபிக்குமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார் . இதனால் நற்செய்தியை நல்ல முறையில் அறிவிப்பதற்கும் , நற்செய்தி காட்டும் வழியில் வாழ்வதால் நற்செய்திக்கு நற்சான்று பகரவும் இறைமக்களை திருத்தந்தை அழைக்கிறார் .








All the contents on this site are copyrighted ©.