காஜாவில் அமைதியை வலியுறுத்துகின்றனர் அயர்லாந்தின் ஆயர்கள்.31 டிசம்பர்
அயர்லாந்தின் கர்தினால் ஷீன் பிராடி, அயர்லாந்தின் ஆர்மா மறைமாவட்டப் பேராயர் ஆலன் ஹார்ப்பர்
, ஆகியோர் வெளியிட்டுள்ள தமது செய்தியில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திருப்பயணிகளாக
நாம் இயேசு பிறந்த புனித பூமிக்குச் சென்றிருந்தோம் . காஜாவில் நடக்கும் வன்முறைபற்றி
வருத்தத்தோடு இருக்கிறோம் . பகைமையை நீக்கி இஸ்ராயேலும் காஜாப்பகுதியினரும் உடனடியாகப்
போரை நிறுத்தி நிரந்தரமாக அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் . வன்முறை
ஓய்ந்தால்தான் அமைதிப்பேச்சுக்கு வழிபிறக்கும் எனப் பேராயர்கள் கூறியுள்ளனர் . வன்முறை
நடக்கும் இடங்களில் அமைதிக்காகச் செபிக்குமாறு இறை மக்களைக் கேட்டுக்கொள்கிறோம். இஸ்ராயேலும்
பாலஸ்தீனமும் வன்முறையைக் கைவிட்டு நல்ல சமாதானத்தோடு வாழ அமெரிக்க ஐக்கிய நாடுகளையும்
, ஐரோப்பியக் கூட்டுறவு நாடுகளையும் வழிசெய்யுமாறு கேட்டுக்கொள்வதாகச் செய்தியில் தெரிவித்துள்ளனர்
.