புத்தாண்டின் முந்தைய மாலை வழிபாட்டில் திருத்தந்தையின் மறையுரை.3112
இவ்வாண்டு முடிவுக்கு வருகிறது . தொடுவானில் அன்னை மரியாளின் ஆசியுறு பார்வை தெரிகிறது
. அன்னை மரியாளின் அருள் பிரசன்னத்தை நாம் குடிலில் காண்கிறோம் . இயேசுப் பாலகன் ஆசிமழை
வழங்கும் காட்சியை அருகிருக்கும் குடிலில் காண்கிறோம் எனத் திருத்தந்தை தமது மறையுரையைத்
தொடங்கினார். அன்னை மரியாளைக் கடவுளின் தாய் என்று அழைத்து நாம் புத்தாண்டின் தொடக்க
நாளில் விழா எடுக்கிறோம் .
என்னதொரு பரிமாற்றம் . உலகினை உருவாக்கிய தேவன்
உடலோடும் ஆன்மாவோடும் கன்னியின் மைந்தனாகப் பிறந்துள்ளார் . தம் கன்னிமை குன்றாமலே ஆண்டவர்
இயேசுவைக் கருத்தரித்திருக்கிறார் மரியாள் . திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய
மடலில் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள்
ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும்
அனுப்பினார் எனக் கூறுகிறார் . கலாத்தியர் மடல் 4, 4-5 .
மாலை வழிபாட்டில்
நாம் கடவுளுக்கு நன்றிக் கீதம் பாடும்போது ஓ கிறிஸ்துவே நீர் கன்னிமாதாவின் வயிற்றில்
மனித மீட்புக்காகப் பிறந்துள்ளீர் எனப் பாடுகிறோம் . தம் உள்ளத்திலும் உடலிலும் இறைவார்த்தையை
வரவேற்ற அன்னையின் மீது நம் கண்கள் இன்று மாலை திரும்புகின்றன எனத் திருத்தந்தை மறையுரையைத்
தொடர்ந்தார் . இந்த ஆண்டின் பன்னிரண்டு மாதங்களில் நமக்கு ஆண்டவர் அளித்த அன்புக் கொடைகளுக்காக
நாம் அன்னை மரியாளின் கரங்களில் நம் நன்றிப் பாக்களைச் சமர்ப்பிக்கிறோம் . நமக்கு கடவுள்
தந்துள்ள காலம் என்னும் கொடைக்காக நாம் நன்றி கூறுவோம் . நாம் எவ்வளவோ நல்ல காரியங்களைச்
செய்வதற்குக் கிடைத்த அவகாசங்களுக்காக நாம் நன்றி கூறுவோம் எனத் திருத்தந்தை கூறினார்
. தூய பேதுரு பசிலிக்காவில் மாலை வழிபாட்டில் பங்கேற்றவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும்
திருத்தந்தை வாழ்த்துக்கூறினார். தந்தையாகிய கடவுளின் வார்த்தையாகிய இறைமகன் நம்மிடையே
வந்து கடவுள் நமக்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளார் எனக்காட்டுகிறார் . நம்மோடு தங்கி நமக்குப்
பேருதவியாக உள்ளார் . அவர் மனுவாக உருவெடுத்தது மிகப் பெரிய கொடை . அவர் நம் பாதைக்கு
விளக்காக வந்துள்ளார் . நம் வாழ்வுக்கு நாம் கணக்குக் கொடுக்க வேண்டும் . இந்தக் கொடையாகிய
இயேசுவை நாம் எல்லோருடனும் பகிர்ந்துகொள்வோம் எனத் திருத்தந்தை தம் மறையுரையில் தொடர்ந்தார்
. உரோமை நகரில் திருச்சபையின் எதிர்காலம் ஒளிமயமாக இருப்பதாகத் தெரிவித்தார் . நிலையில்லா
எதிர்காலத்தில் நாம் கிறிஸ்துவின் பிரசன்னத்தில் வாழவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் .
குழந்தைகளையும் , இளையோரையும் நினைவு கூர்ந்து செபித்தார் . சமூக , பொருளாதார வீழ்ச்சி
இந்த ஆண்டை முடிவுக்குக் கொண்டுவருகிறது . வாழ்வில் துன்பத்தில் உள்ளவர்களுக்கு நாம்
உதவவேண்டும் என அழைப்பு விடுத்தார் . 2008 ஆம் ஆண்டை நாம் விடுத்து 2009 ஆம் ஆண்டை அன்னை
மரியாளின் துணையோடு துணிவோடு எதிர்கொள்வோம் எனக்கூறி , இந்த நம்பிக்கையோடு நாம் இறைவா
நீரே எமது நம்பிக்கை .நாங்கள் குழப்பத்தில் வீழாது பாதுகாத்தருளும் . இன்றும் எந்நாளும்
நீரே எமது நம்பிக்கையாக உள்ளீர் எனத் தேதேயும் என்ற இறை நன்றிப் பாடல் வரிகளை மேற்கோள்
காட்டி தம் மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .