2008-12-30 15:11:54

திருத்தந்தை 16ம் பெனடிக்டை காண்பதற்கு உரோமைக்கு வரும் திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சீரான எண்ணிக்கையில் இருந்து வருகிறது


டிச.30,2008. திருத்தந்தை 16ம் பெனடிக்டை காண்பதற்கு உரோமைக்கு வரும் திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சீரான எண்ணிக்கையில் இருந்து வருவதாக பாப்பிறை இல்ல நிர்வாகம் நேற்று அறிவித்தது.

திருத்தந்தை 16ம் பெனடிக்டின் புதன் பொது மறைபோதகம், அவருடனான சிறப்பு சந்திப்புக்கள், அவர் நிகழ்த்தும் திருவழிபாடுகள், மூவேளை செப உரைகள் ஆகியவற்றில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 2008ல் 22 இலட்சத்துக்கு 10 ஆயிரத்துக்கு மேலும், 2007ல் 28 இலட்சத்து அதிகமாகவும், 2006ல் 32 இலட்சத்துக்கு மேற்பட்டும் இருந்தது என்று அறிவிக்கப்பட்டது.

2008ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி திருத்தந்தை 16ம் பெனடிக்டின் 42 புதன் பொது மறைபோதகங்களில் 5,34,500 பேரும், இன்னும் சிறப்பு சந்திப்புக்களில் 2,26,500 பேரும் அவரின் திருப்பலி மற்றும் திருவழிபாடுகளில் 3,24,000 பேரும், மூவேளை செப உரைகளில் 11 இலட்சத்து பத்தாயிரம் பேரும் கலந்து கொண்டனர் என்றும் பாப்பிறை இல்ல நிர்வாகம் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.