ஆயரக்கணக்கான கிறிஸ்தவர்களும் பக்தர்களும் பெத்லகேமில் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினர்
. பாலஸ்தீனக் காவலர்கள் பாதுகாப்புக் கொடுத்தனர் . கொண்டாட்டம் மிக அமைதியாகவும் பக்திப்
பரவச்த்தோடும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது . வழக்கத்துக்கு மேல் இந்த ஆண்டு பக்தர்கள்
அதிக அளவில் பெத்லகேமுக்கு வந்திருந்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இயேசு பிறந்த குகைக்கு
முன்னர் டிசம்பர் 25 காலையில் திருப்பவனி நடைபெற்று பாலன் பிறந்த குகைக்குச் சென்றதாகத்
தெரிகிறது . அன்று காலையில் இலேசான மழைச் சாரல் இருந்திருக்கிறது . பாலஸ்தீனத் தலைவர்
மகமூத் அப்பாஸ் புனித கத்தரீன் தேவாலயத்தில் பங்கேற்றிருந்தார் . மக்கள் கூட்டம் அதிகமாக
இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது