2008-12-27 14:06:48

பொருளாதார நெருக்கடியினால் துன்புறும் மக்களை நினைத்து பார்க்குமாறு சிட்னி பேராயர் அழைப்பு


டிச.27,2008. உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் துன்புறும் மக்களை இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில் மக்கள், குறிப்பாகக் கிறிஸ்தவர்கள் நினைத்து பார்க்குமாறு ஆஸ்திரேலியாவின் சிட்னி பேராயர் கர்தினால் ஜார்ஜ் பெல் அழைப்புவிடுத்தார்.

பொருளாதார நெருக்கடிகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் தெரியும் வேளை, இதனால் ஏற்கனவே தங்கள் வேலைகளை இழந்துள்ள மக்களை முதலில் நினைக்குமாறு கர்தினால் பெல்லின் கிறிஸ்துமஸ் செய்தி கேட்டுள்ளது.

கிறிஸ்தவர்கள் தாங்கள் போதிப்பதைச் செயல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ள அவர், சர்வதேச பணமுதலைகள் எப்படி இவ்வாறு தவறிழைக்க முடியும் என்று பொருளாதார நெருக்கடிகள் நம்மை வியக்க வைக்கின்றன, எனினும் நம் வாழ்வை இக்காலத்தில் புதுப்பித்துக் கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.