2008-12-26 14:01:16

மடு மாதா ஆலயம் ஜனவரியில் மாதம் திறப்பு


டிசம்.26.2008. இலங்கையில் மிகவும் புனிதமாக மதிக்கப்படும் மடுமாதா ஆலயம் தனது பக்தர்களுக்கென வருகிற ஜனவரியில் திறக்கப்பட உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய கிறிஸ்தவ விவகாரங்களுக்கான அமைச்சர் மில்ராய் பெர்னாண்டோ, ஆலய மறுசீரமைப்புப் பணிகள் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

மடு ஆலயத்துக்கான மின்சார இணைப்புக்கள் மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும் சாலை பராமரிப்புப் பணிகளுடன் குடிநீர் வசதிகளும் அமைக்கப்பட்ட வேண்டியுள்ளன என்றும் அவர் கூறினார்.

தற்போதைய மறுசீரமைப்புக்குப் பின்னர் இவ்வாலய விழா வெகு ஆடம்பரமாகச் சிறப்பிக்கப்படும் என்று அரசு நமபிவதாக அவ்வமைச்சர் கூறினார்.

ஏறத்தாழ 15 வருடங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மடுமாதா ஆலயத்தைச் சில மாதங்களுக்கு முன்னர் பாதுகாப்புப் படை கைப்பற்றியது.








All the contents on this site are copyrighted ©.