இலங்கையின் கிழக்கில் கடத்தல்களும் படுகொலைகளும் தொடர்கின்றன: மட்டக்களப்பு -திரிகோணமலை
ஆயர் கவலை
டிச.26.2008. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் படுகொலைகளும், கடத்தல்களும் தொடர்வாதாக
மட்டக்களப்பு - திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாமிபிள்ளை தனது கிறிஸ்துமஸ் அதாவது
நத்தார் பெருவிழாச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
வன்முறைகள் மனிதாபிமானத்தை
அழித்து விட்டன. மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் கடும் நெருக்கடிகளை
சந்தித்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வதற்கான ஆதாரங்களை இழந்துள்ளனர் என்று அவர்
மேலும் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் கடத்தல்களும், படுகொலைகளும்
தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அங்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும். இரு வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்களில் சிலர் இன்றுவரை தமது
இடங்களில் மீண்டும் குடியேற முடியாதது வருந்ததக்கது. அமைதியை ஏற்படுத்துவதற்கு நேர்மையான
செயற்பாடுகள் தேவை எனவும் ஆயர் கிங்ஸ்லி தெரிவித்துள்ளார்