மத்திய பிரதேச மாநில புதிய முதலமைச்சரின் பதவிப்பிரமாண நிகழ்வுக்குத் தலத்திருச்சபை அழைக்கப்பட்டிருந்தது
நல்லதொரு அடையாளமாக இருக்கின்றது- போபால் பேராயர்
டிச.23,2008 இந்தியாவின் மத்திய பிரதேச மாநில புதிய முதலமைச்சரின் பதவிப்பிரமாண நிகழ்வுக்குத்
தலத்திருச்சபை அழைக்கப்பட்டிருந்தது நல்லதொரு அடையாளமாக இருக்கின்றது என்று போபால் பேராயர்
லியோ கொர்னேலியோ கூறினார்.
மத்திய பிரதேச மாநில புதிய முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங்
சவ்கான் பதவிப்பிரமாணம் செய்த நிகழ்வில் பேராயர் லியோ கொர்னேலியோ உட்பட ஆறு கிறிஸ்தவ
சபைத் தலைவர்கள், இன்னும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவ
சபைத் தலைவர்கள் இதற்கு அழைக்கப்பட்டதன் மூலம் புதிய அரசு சுமுகமாகச் செல்வதற்கு ஒவ்வொரு
சமூகமும் தேவை என்பதை புதிய முதலமைச்சர் சவ்கான் காட்டியுள்ளார் என்றும் போபால் பேராயர்
கூறினார்.
பிஜேபி கட்சியைச் சேர்ந்த சவ்கான் திருச்சபைத் தலைவர்களின் நல்லாசீரையும்
வேண்டினார் என்றும் ஊடகங்கள் கூறின.