திருத்தந்தை மேத் திங்களில் புனித பூமிக்குச் செல்லவிருக்கிறார் .23,டிசம்பர்.
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்டின் புனித பூமிக்கான முதல் திருப்பயணம் வரும் மே மாதம்
இருக்கலாம் என எருசலேம் நகரப் பேராயர் போவாட் ட்வால் தெரிவித்துள்ளார் . திருத்தந்தை
எருசலேம் மக்கள் படும் சிரமங்களை நேரில் அறிந்து கொள்ள விரும்புவதாகவும் , எருசலேம் மக்களோடு
இணைந்து செபிக்க விரும்புதாகவும் பேராயர் ட்வால் தெரிவித்துள்ளார் . அடுத்த ஆண்டு மே
மாதம் நடுவில் திருத்தந்தை ஜோர்டான் மற்றும் இஸ்ராயேலுக்குச் செல்லலாம் எனப் பேராயர்
ட்வாட் தெரிவித்துள்ளார் . நாசரேத்துக்கும் பெத்லகேமுக்கும் திருத்தந்தை செல்வார் என
எதிரப்பார்க்கப்படுகிறது . அங்குச் செல்லும்போது பாலஸ்தீனத் தலைவர் மாமூட் அப்பாசையும்
சந்திப்பார் எனப் பேராயர் ட்வால் தெரிவித்துள்ளார் . பேராயர் போவாட் ட்வால் வத்திக்கானின்
திருப்பூமிக்கான முக்கியப் பிரதிநிதி. அவரது கிறிஸ்மஸ் செய்தியின் போது திருத்தந்தையின்
புனித பூமிக்கான திருப்பயணம் பற்றிச் செய்தி வெளியிட்டார் .