எக்ஸ்டி3 பன்வலை அமைப்பு வத்திக்கானின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது
டிச.23,2008 ஆஸ்திரேலியாவில் கடந்த ஜூலையில் நடைபெற்ற உலக இளையோர் தினத்தின் பயனாகத்
தொடங்கப்பட்ட சமூகப் பன்வலை அமைப்பு வத்திக்கானின் அங்கீகாரத்தையும் கவனத்தையும் பெற்றுள்ளது
என்று சிட்னி பேராயர் கர்தினால் ஜார்ஜா பெல் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
எக்ஸ்டி3.காம்
என்ற இணையதளம் உலக இளையோர்க்கான செய்திகள், நிகழ்வுகள், பிறரன்பு திட்டங்கள் ஆலோசனைகள்
மற்றும் உறவுப்பாலங்களைக் கொண்டுள்ளது.
16க்கும் 35 வயதுக்கும் உட்பட்ட இளையோர்க்கென
இந்த இணையதளம் இயங்குகிறது. இதில் ஏற்கனவே 170க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 40 ஆயிரத்துக்கு
அதிகமான இளையோர் இணைந்துள்ளனர்.
வத்திக்கானில் கிடைத்த புதிய அங்கீகாரத்திற்குப்
பின்னர் இதில் வத்திக்கான் சமூகத்தொடர்பு நூலக விடயங்களும் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.