2008-12-23 20:31:39

அமெரிக்கக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒபாமா அமைதியை நிலைநாட்டுவார் என எதிர்பார்க்கிறது வத்திக்கான் . 23,டிசம்பர் .


குடும்பம் பற்றியும் , பிறக்கவுள்ள குழந்தைகள் பற்றியும் ஒபாமா என்ன முடிவுகளை எடுப்பார் என கவலை தெரிவித்துள்ளது வத்திக்கான் . ஆனால் ஏழைகளை மனதில் கொண்டு , உலகில் வன்முறைகள் நீங்கி அமைதி நிலவ வழிவகுப்பார் என எதிர் நோக்குவதாக ஓய்வு பெற்ற கர்தினால் பியோ லகி கருத்துத் தெரிவித்துள்ளார் . கர்தினால் பியோ லகி அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கான முந்நாள் வத்திக்கானின் தூதராக இருந்தவர் . இத்தாலிய இதழ் லைம்ஸ் நடத்திய கருத்தரங்கில் இம்மாதம் 22 ஆம் தேதி கர்தினால் லகி தம் எதிர்பார்ப்புக்களைத் தெரிவித்தபோது நல்ல ஒத்துழைப்பை ஒபாமா தருவார் என்று வத்திக்கான் எதிர்நோக்குவதாகவும் கர்தினால் கருத்து வெளியிட்டார் .








All the contents on this site are copyrighted ©.