உலகில் பசி, நோய் மற்றும் சண்டையினால் துன்பப்படும் எண்ணற்ற சிறாரை நினைக்க திருத்தந்தை
அழைப்பு
டிச.20,2008. உலகில் பசி, நோய் மற்றும் சண்டையினால் துன்பப்படும் தங்களையொத்த வயதுடைய
எண்ணற்ற சிறாரை நினைக்குமாறு இத்தாலிய கத்தோலிக்க கழகச் சிறாரிடம் திருத்தந்தை இன்று
கூறினார்.
இத்தாலிய கத்தோலிக்க கழகத்தின் ஏறத்தாழ 45 சிறாரை இன்று திருப்பீடத்தில்
சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, சிறார் பொதுவாக எதிலும் திருப்தி அடையமாட்டார்கள்,
விளையாட்டுப் பொருட்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் என்ற பரவலான எண்ணம் இருக்கின்றது,
ஆனால் நீங்கள் விளையாண்டாலும் படித்தாலும் வீட்டில் பெற்றோருடன் இருந்தாலும் எல்லா நேரங்களிலும்
இயேசுவிடம், இயேசுவே, நீர் மட்டும் போதும், நீரே எங்கள் இனிய நண்பர், இனிய தோழர் என்று
சொல்லுமாறு கூறினார்.
அதேசமயம் மற்ற சிறாரும் இவ்வாறு வாழ உதவுமாறு கூறிய திருத்தந்தை,
ஆயுதத் தயாரிப்பாளர்கள், பயங்கரவாதிகள், எப்பொழுதும் போரிட நினைப்போர் ஆகியோரின் மனமாற்றத்திற்காகச்
செபிக்குமாறு கூறினார்.
உலகில் எல்லாச் சிறாரும் நன்கு வாழ உதவும் நல்லதோர் சமுதாயம்
கட்டப்பட இயேசுவிடம் செபிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.