2008-12-19 20:18:09

கொரியாவின் மருத்துவர்கள் கருணைச் சாவுக்கு எதிர்ப்பு .19, டிசம்பர் .


கொரியா நாட்டின் செவரன்ஸ் மருத்துவ மனையை கிறிஸ்தவ புரோட்டஸ்டண்ட் சபையினர் நடத்திவருகின்றனர் . அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் மயக்க நிலையில் இருந்து வருகிறார் . அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவச் சிகிச்சைகளை நிறுத்திக் கொள்ள கீழ் நீதி மன்றத்தில் உத்தரவு கேட்டிருந்தனர் . உத்தரவும் தரப்பட்டுள்ளது . இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் இறந்துவிடும் நிலையில் அப்பெண்மணி இருப்பதால் சிகிச்சைகளை நிறுத்திவிடுமாறு மருத்துவ மனைக்கு நீதி மன்றம் அறிவுறுத்தியிருக்கிறது . ஆனால் அந்த மருத்துவ மனையின் மருத்துவர்கள் இதற்கு உடன்பட மறுத்து மேல் நீதி மன்றத்துக்கு மனு செய்ய உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன .








All the contents on this site are copyrighted ©.