2008-12-19 20:41:02

இலங்கை ஆயர்கள் விழாக்காலத்தில் போரை நிறுத்த வேண்டுகோள். 19,டிசம்பர் .


இலங்கையில் மக்கள் அவதியுறும் நிலையில் கிறிஸ்துமஸ் , புத்தாண்டு விழாக்காலத்தில் போரை நிறுத்துமாறு கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிக்கன் ஆயர்கள் இலங்கை அரசை கேட்டுக்கொண்டுள்ளனர் . ஆனால் அரசு மறுப்புத்தெரிவித்துள்ளது . விடுதலைப் புலிகளை முதலில் போரை நிறுத்தச் சொல்லியுள்ளனர் . செஞ்சிலுவைச் சங்கத்தோடு இணைந்து ஆயர்கள் தங்கள் வேண்டுகோளைச் சமர்ப்பித்துள்ளனர் . இம்மாதம் 15 ஆம் தேதியே இலங்கையின் வடபகுதியில் மோதலைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் . இதற்கிடையில் போர் தொடர்கிறது . விடுதலைப் புலிகளை ஒடுக்கிவிட்டதாக அரசு கூறுகிறது . கிளிநொச்சியை பிடிக்கப்போவதாக பல மாதங்களாகவே இராணுவத்தலைவர் உதய நாணயக்காரா சொல்லிக்கொண்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன .








All the contents on this site are copyrighted ©.