2008-12-19 18:43:44

இந்துமதத்தீவிரவாதிகள் தாக்கியதில் மறைபோதகர் கொல்லப்பட்டார். 19,டிசம்பர் .


20 பேர் கொண்ட தீவிரவாதக் கும்பல் தாக்கியதில் 40 வயதுடைய யுவராஜ் டிகால் இறந்துவிட்டார் . இந்நிகழ்ச்சி இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது . அவரும் அவரது மகனும் மோட்டார் சைக்கிளில் வந்துபோது நிறுத்தித் தாக்கப்பட்டதில் இறந்ததாக தப்பித்துக் கொண்ட 20 வயதுடைய அவருடைய மகன் பித்யாதர் கூறியுள்ளார் .காந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ் டிகால் நல்ல மறை போதகர் என்றும் உள்ளூர் கிறித்தவ குழுவின் தலைவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையில் இதுவரை 500 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் .








All the contents on this site are copyrighted ©.