2008-12-15 15:49:11

திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்திக்கு மற்றுமொரு கௌரவ முனைவர் பட்டம்


டிச.15,2008. திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்திக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்க ஸ்பெயின் நாட்டு சாலமான்கா பாப்பிறைப் பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.

அருட்தந்தை லொம்பார்தி, வத்திக்கான் வானொலி, திருப்பீட பத்திரிகை அலுவலகம், வத்திக்கான் தொலைக்காட்சி ஆகியவைகளின் இயக்குனராவார்.

1942ல் வட இத்தாலியில் பிறந்த இவர், 1960இல் இயேசு சபையில் சேர்ந்தார். கானாடாவின் மிகப்புகழ் பெற்ற இறையியல் துறைகளைக் கொண்டுள்ள டொரொன்ட்டோ பல்கலைக்கழகத்தின் ரேஜிஸ் கல்லுரியிடமிருந்து கடந்த மே மாதத்தில் மற்றுமொரு கௌரவ முனைவர் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது







All the contents on this site are copyrighted ©.