திருவருகைக் கால சிந்தனை – மத்தேயு நற்செய்தி .அதிகாரம் 21 , திருவசனங்கள் 23 – 27 .
இயேசு தலைமைக்குருக்களிடம் யோவானுக்கு திருமுழுக்குக் கொடுக்கும் அதிகாரம் எங்கிருந்து
வந்தது எனக் கேட்டார் . அவர்கள் இயேசுவிடம் எங்களுக்குத் தெரியாது எனப் பதிலுரைத்தார்கள்
. மக்களுக்கு உண்மையான இறைவாக்கினர் யார் என்றும் , போலி இறைவாக்கினர் யார் என்றும் அடையாளம்
காட்டவேண்டிய தலைமைக்குருக்கள் தெரியாது எனக் கூறுவதால் அவர்கள் பணியைத் திறம்படச் செய்யத்
தவறுகிறார்கள் . உண்மையைக் கூறுவதற்குப்பதிலாக தெரியாது என மறுதலிப்பது மிகப் பெரிய குற்றம்
. உண்மையை உரைக்க வேண்டிய கட்டத்தில் எந்தப் பதில் நமக்குச் சாதகமாக இருக்கும் எனப் பார்ப்பது
தவறு . சரியானது எது என்பதைக் கூற முன்வரவேண்டும் .
சிந்தனைக்கு – ஒன்றன்
மெய்ப்பொருள் உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ளும்போது நாம் நீதியுள்ளவர்களாக , வீரமுள்ளவர்களாக
, பண்பாளராக , தெய்வமாக மாறுகிறோம் என்கிறார் வில்லியம் லாய்ட் காரிசன் என்பவர் .