ஒரு காரியத்தின் முடிவுக்கு முன்னர் நாம் கொடுக்கும் விளக்கங்களைக் காரணங்கள் என்கிறோம்
. முடிவுகளைச் செயல்படுத்தாததற்கு நாம் கொடுக்கும் விளக்கம் மழுப்பு வாதமாகும் . காரணங்கள்
என்ற பெயருக்கு அருகதை உள்ளவை பொதுவாக நடிப்பற்ற நாணயம் தவறாதவை . மழுப்புதல் என்பது
பொதுவாக தன்னுடைய நடத்தையைச் சமாளிப்பதாகும் . காரணம் என்பது கற்பனை அல்லாத மெய்மையாகும்
. புற வாய்மையுடையது . மழுப்புதல் என்பது கற்பனையாகப் புனையப்படுவது . பலவீனமான காரணமாகும்
.
ஆதாமும் ஏவாளும் விவிலியத்தின் தொடக்க நூலில் காட்டப்படுகின்றனர் .
ஆதாம் தடை செய்யப்பட்ட பழத்தை உண்டதற்குச் சரியான காரணம் அது புலன்களுக்குச் சுவையூட்டுவதாக
இருந்தது .ஆனால் ஆதாம் அதை ஏவாள் கொடுத்ததால் உண்டதாக மழுப்புகிறார் .
நற்செய்தியில்
கொடுக்கப்பட்ட உவமையில், பணத்தை புதைத்து வைத்ததற்கான காரணம் அவனுடைய அக்கறையில்லாத மெத்தனப்போக்கும்
சோம்பேறித்தனமும் . அவனை நற்செய்தி கெட்ட , சோம்பேறி என வர்ணிக்கிறது . அவன் கொடுக்கும்
மழுப்பலான காரணம் தலைவன் கடுமையானவர் என்பதால் முயற்சியில்லாது இருந்ததாகக் கூறுகிறான்
. விவிலியத்தில், இருப்பவர்களுக்கு இன்னும் கொடுக்கப்படும் என்பதற்குக் காரணம் அவர்கள்
முயற்சியுடையவர்கள் . வகுப்பு ஆசிரியர் நேர்மையாக நடங்கள் . முகமூடி வேண்டாம் எனக்கூறினால்
, இல்லை , எல்லோரும் முகமூடி அணிகிறார்கள் , நானும் அணிந்துதான் திரிவேன் என்றால் அது
விதண்டவாதம் ..
நற்செய்தியில் இயேசுவைப் பின் தொடர அவர் அழைத்தபோது தங்கள்
உடைமை மீது கொண்டிருந்த பற்றுக்காரமாகவோ , தங்கள் புகழைப் பரப்ப உதவுபவைகளைப் பற்றிக்
கொள்வதன் காரணமாகவோ , அவர்கள் அவரைப் பின் தொடர விரும்பவில்லை . ஆனால் அவர்கள் கொடுத்த
காரணங்கள் நிலம் வாங்கியிருப்பதால் கவனிக்க வேண்டும் என்றும் , புதிய எருதுகளை வாங்கியுள்ளதால்
அவற்றை வண்டியை இழுக்கப் பழக்க வேண்டும் எனவும் , மணம் முடித்துள்ளதால் தேனிலவுக்குச்
செல்ல வேண்டும் எனவும் மழுப்பல் பதில்கள் கொடுக்கப்பட்டன .
அதனால் ஒருவர்
பதில் கொடுக்கும்போது அவர் என்ன கூறினார் என்பதைவிட ஏன் கூறினார் என ஆராய்வது மெய்ப்பொருள்
காண்பதற்கு வழியாகும் . உளவியல் ரீதியாக அவர் மனதுக்குள் அவர் மறைப்பது என்ன என நாம்
ஆராயவேண்டும் . உண்மையான காரணங்கள் வெளிவருவதில்லை . மூடி போட்டுக்கொணடு, உண்மைக்குப்பதிலாக
மழுப்புதல் காரணமாக வேறு உடனடி விடைகள் தரப்படுகின்றன . ஆபிரகாம் லிங்கனை ஒரு குடும்பம்
பார்க்கச் சென்றது . வழியில் அவர் அழகில்லாதவர் எனப்பேசிக்கொண்டு சென்றார்கள் . அவர்களோடு
சென்ற குழந்தை லிங்கனைப்பார்த்ததும் அம்மாவிடம் அம்மா, ஆபிரகாம் லிங்கன் அழகாகத்தானே
இருக்கிறார் என்றது . அக்குழந்தை உண்மையைக்கூறுகிறது.
உண்மையை உணர முயலும்
ஒருவர்
தமது பகுத்தறிவைச் சரியாகப் பயன்படுத்தி நடுநிலையோடு காரணங்களை ஆராயவேண்டும்
. தம்முடைய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் , முக்கியமாக ஒருவருடைய அடிமனத்தில் புதைந்திருப்பவை
கூறுவதையும் ஒதுக்கிவிட்டு உண்மையை நடுநிலை தவறாது ஆராயவேண்டும். உளவியலார் நமது உதவிக்கு
வரலாம் . ஆனால் ஆன்மீக வாழ்விலும் நன்னெறிவாழ்விலும் ஒருவர் மழுப்பும் பழக்கத்தினால்
உண்மைக்குத் தடாப்போடலாம்.
ஏன் அந்த இளவரசி மணமகனைக் கைவிட்டுவிட்டாள்
எனத் தெரியுமா .
அந்த அழகான இளவரசியும் இளவரசனும் மணமேடையில் திருமண ஒப்பந்தத்துக்காகக்
காத்திருந்தனர் . இளவரசன் பேசினான் . உன் அழகான முகமும் , கண்களும், தூய்மையான , மாசில்லாத
மொத்த உருவமும் என்னைக் கவர்ந்துள்ளன. நான் உன்னிடம் ஒன்றைக்கூற விரும்புகிறேன். உன்னைப்
பார்க்கக் கூட அருகதை அற்றவன் நான் . நான் ஒரு பாவி. குடிப்பழக்கம், சூது , புகைப்பழக்கம்
கொண்டவன் நான் என்றான் . இளவரசியோ பரவாயில்லை . திருத்திக் கொள்ளலாம் , என்றாள். இவற்றை
நாம் வென்று விடலாம் என்றாள். அவனோ , இவை மட்டுமல்ல , நான் வேறு சில கெட்ட பழக்கமும்
உள்ளவன். நான் சொல்லியபடி நடப்பதில்லை . நான் சொல்வது ஒன்று , செய்வது ஒன்றாக இருக்கும்
என்றான் . அப்படியென்றால் என்னால் உன்னோடு வாழமுடியாது எனக் கூறிவிட்டு இளவரசி மணமேடையை
விட்டு அகன்றுவிட்டாள். மனித வார்த்தைகள் கடவுள் வார்த்தை போலிருக்க வேண்டும் . உண்மையுள்ள
இடத்தில் கடவுள் இருக்கிறார்.
எல்லா விளக்கும் விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா
விளக்கே விளக்கு . குறள் 299.
நம் செருக்கையும் ஐந்தன்புலத்தையும்
அடக்க
நமக்கு வழியாக, ஒளியாக , வாழ்வாக வருகிறது இறைவனின் வாக்கு . பொய்யாமை
அன்ன புகழில்லை –மழுப்புவதைத் தவிர்ப்போம் . அதுவே நிம்மதிக்கு வழி .