புனித பூமிக்காக சிறப்பாகச் செபிக்கமாறு வேண்டுகிறார் திருத்தந்தை.07,நவம்பர்.
இம்மாதம் 5 ஆம் தேதி புனித பூமியின் கல்லறைப் பாதுகாவலர்கள் திருத்தந்தையைச் சந்தித்துப்
பேசினார்கள் . அதுபோது அதன் வரலாற்றில் கிறிஸ்துவின் கல்லறையைப் பாதுகாப்பதற்காக அந்த
நிறுவனம் அமைக்கப்பட்டதாகத் திருத்தந்தை கூறினார். அங்கு வாழும் கிறிஸ்தவர்களுக்காக முக்கியமாகப்
புலம் பெயரும் கிறிஸ்தவர்களுக்காக கவலை வெளியிட்டார். அதிகத் துயரங்களைச் சந்திக்கும்
அங்குள்ள நம் சகோதர , சகோதரிகளுக்காக செபிக்குமாறு திருத்தந்தை கேட்டுக் கொண்டார் .