2008-12-06 16:20:04

மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் பலியானவர்களுக்காக இந்திய கத்தோலிக்கர்கள் செபித்தனர்


06டிச.,2008. மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் பலியானவர்களுக்காகச் செபிப்பதற்காகவும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கவும் இந்திய கத்தோலிக்கர்கள் பல இடங்களில் ஊர்வலங்களையும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளனர்.

பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த மும்பை இரண்டு பெரிய உல்லாச பயணியர் விடுதிகளுக்கு அருகிலுள்ள இந்திய கேட்வேகேக்கு அருகில் கடந்த புதனன்று ஏறத்தாழ பத்தாயிரம் பேர் மெழுகுதிரிகளுடன் கூடி நின்று செபித்தனர்.

புதுடெல்லி, புனே, மங்களூர், கொல்கத்தா, லக்னௌ, எனப் பல இடங்களிலும் ஆயிரக்கணக்கில் கத்தோலிக்கர் கூடி செபித்தனர்.

குஜராத்தில் இன்றும் ஞாயிறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.








All the contents on this site are copyrighted ©.