இந்திய ஆயர்கள் தீண்டாமையை ஒழிக்கத் திட்டமிட்டுள்ளார்கள் .05 ,நவம்பர் ,08.
இந்தியாவில் சாதிகள் இல்லை எனக்கூறி பல்லாண்டுகள் ஆகின்றன . ஆனால் தீண்டாமையால் பாதிப்புக்குள்ளாகியுள்ளோர்
இன்னும் ஒதுக்கப்பட்டும் , தாக்கப்பட்டும் வருகிறார்கள் . முக்கியமாக அவர்கள் கிறிஸ்தவகர்களாக
மதம் மாறியிருந்தாலோ , இஸ்லாமியராக மாறியிருந்தாலோ அதிகத் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்
.
வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதி ஞாயிறன்று தாழ்த்தப்பட்ட சாதியினர் தினமாகச்
சிறப்பிக்க இந்திய ஆயர் குழு முடிவு செய்துள்ளது . நீதி , விடுதலை என்ற தலைப்புக்களில்
சிந்திக்க உள்ளனர் . ஒரிசாவில் கொல்லப்பட்டவர்களில் 57 பேர் தாழ்த்தப்பட்ட மக்கள் என்றும்
, அங்கு தாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்
இந்திய ஆயர் குழு தெரிவித்துள்ளது .