2008-12-04 19:12:35

ஒரிசாவி்ல் மீண்டும் வன்முறை . 04, டிசம்பர் .08.


கிறிஸ்துமஸ் விழாவுக்கு முன்னரே ஒரிசாவில் வன்முறைகள் தொடங்கியுள்ளதாக ஆசியச் செய்தி நிறுவனம் கூறுகிறது . தீவிரவாதிகள் ஒரு பெண்மணியை வெட்டி, துண்டு துண்டாக்கி காட்டுக்குள் எறிந்துவிட்டார்கள் . மேலும் ஒரு பெண்மணியைக் காணவில்லை எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் இருவரும் தங்கள் கிராமத்துக்குத் திரும்பி குடும்பத்துக்கு வேண்டிய நெல் அறுவடைக்காகச் சென்றிருந்தனர் . ஒரிசா அரசு,கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்புத் தர இயலாத நிலையில் உள்ளது . இதுவரை நடந்த வன்முறைகளுக்கும் யாரும் கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது .

மேலும் ஒரிசாவின் உயர்நீதி மன்றம் கீழ் நீதிமன்ற வழக்கைத் தள்ளுபடி செய்து சகோதரி மீனா பார்வா ஒரிசாவுக்குள் வந்து கற்பழித்தவர்களை அடையாளம் காட்டவேண்டியதில்லை எனச் சகோதரிக்குச் சார்பாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.