எய்ட்ஸ் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் மருந்துகள்
கண்டுபடிக்கப்பட வேண்டும்
03டிச.2008. எய்ட்ஸ் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நோக்கில்
மருந்துகள் கண்டுபடிக்கப்பட வேண்டும் என்று உலக மருந்து நிறுவனங்களுக்கு விண்ணப்பம் ஒன்றை
விடுத்துள்ளது சர்வதேச கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.
போதிய மருத்துவ வசதியின்மையால்
ஹைச்சய்வி நோய்க்கிருமி பாதிப்படைந்துள்ள குழந்தைகள் தங்கள் இரண்டாவது பிறந்த நாளுக்குள்ளேயே
உயிரிழந்து வருவதாக குறிப்பிட்ட சர்வதேச காரித்தாஸ் அமைப்பின் தலைவர் கர்தினால் ஆஸ்கார்
ரொட்ரிகஸ் மாராதியாகா, அடுத்த ஆண்டு இடம் பெறவிருக்கும் 162 காரித்தாஸ் அங்கத்தினர்கள்
அமைப்புக் கூட்டத்தில் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதங்கள் இடம் பெறும்
என்றார்.