திருத்தந்தையைச் சந்தித்த இலங்கைத் தலைவரின் அறிக்கை.021208
இலங்கையின் தலைவர் மகிந்தா இராஜபக்சா திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டை இம்மாதம் முதல் தேதி
வத்திக்கானில் சந்தித்தார் . அவருடன் அவருடைய குடும்பத்தினரும் சில அரசுப் பிரதிநிதிகளும்
வந்திருந்தனர் . திருத்தந்தையைச் சந்தித்த பிறகு மகிந்தா செய்தி ஊடகங்களுக்குக் கொடுத்த
செய்தியில் இலங்கையின் வளர்ச்சியில் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் மிகுந்த ஆர்வம் காட்டியதாகத்
தெரிவித்தார் . இலங்கை அரசு எடுக்கும் மனிதாபிமான உதவிகள் குறித்தும் , இலங்கையின் எல்லாப்
பகுதியிலும் குடியாட்சியின் சுதந்திரத்தைக் கொண்டுவருவது குறித்தும் திருத்தந்தை ஆர்வம்
கொண்டிருந்ததாகத் தெரிவித்தார் . வத்தி்க்கான் திருப்பீடச் செயலர் கர்தினால் தார்சீசியோ
பெர்த்தோனையையும் சந்தித்தார் . அதுபோது கர்தினால் இராஜபக்சாவிடம் சமயச் சுதந்திரம் பற்றியும்
, இலங்கையின் வடபகுதியில் நடக்கும் போர் குறித்தும் பேசியதாகத் தெரிவித்தார் .