2008-12-02 19:15:09

திருத்தந்தையைச் சந்தித்த இலங்கைத் தலைவரின் அறிக்கை.021208


இலங்கையின் தலைவர் மகிந்தா இராஜபக்சா திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டை இம்மாதம் முதல் தேதி வத்திக்கானில் சந்தித்தார் . அவருடன் அவருடைய குடும்பத்தினரும் சில அரசுப் பிரதிநிதிகளும் வந்திருந்தனர் . திருத்தந்தையைச் சந்தித்த பிறகு மகிந்தா செய்தி ஊடகங்களுக்குக் கொடுத்த செய்தியில் இலங்கையின் வளர்ச்சியில் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் மிகுந்த ஆர்வம் காட்டியதாகத் தெரிவித்தார் . இலங்கை அரசு எடுக்கும் மனிதாபிமான உதவிகள் குறித்தும் , இலங்கையின் எல்லாப் பகுதியிலும் குடியாட்சியின் சுதந்திரத்தைக் கொண்டுவருவது குறித்தும் திருத்தந்தை ஆர்வம் கொண்டிருந்ததாகத் தெரிவித்தார் . வத்தி்க்கான் திருப்பீடச் செயலர் கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனையையும் சந்தித்தார் . அதுபோது கர்தினால் இராஜபக்சாவிடம் சமயச் சுதந்திரம் பற்றியும் , இலங்கையின் வடபகுதியில் நடக்கும் போர் குறித்தும் பேசியதாகத் தெரிவித்தார் .








All the contents on this site are copyrighted ©.