40 ஆவது ஆண்டுவிழாக் கொண்டாடுகிறது இலங்கைக் காரித்தாஸ்.021108.
இலங்கைக் காரி்த்தாஸ் தொண்டு நிறுவனம் அங்குப் பிறரன்புச் சேவையில் 40 ஆவது ஆண்டைக் கொண்டாடுகிறது
. இந்நிறுவனம் இலங்கையில் அருள்தந்தை ஜோசப் பெர்னாண்டோ என்பவரால் தொடங்கப்பட்டது . தற்பொழுது
நாடெங்கும் 11 மையங்களில் பணிசெய்து வருகிறது . இதனால் 300 கிளை மையங்களும் இயங்குகின்றன
. இலங்கையின் கொழும்பில் டிசம்பர் 2 ,3 தேதிகளில் வாணிபப் பொருட்காட்சியோடு இவ்விழா நடக்கிறது
. தற்போது இந்நிறுவனத்தின் இயக்குநராக உள்ள தந்தை டேமியன் பெர்னாண்டோ இவ்விழாவைப்பற்றிக்
கூறும்போது வாணிபத் திருவிழா நாட்டில் 13 மறைமாவட்டங்களில் நடக்கிறது. துன்புறுவோர்
துயர் துடைக்க இவை பேருதவியாக இருக்கும் என்றார் .