2008-12-01 16:07:26

சிறைக் கைதிகள் தங்கள் சுதந்திரத்தை இழக்கின்றனர், ஆனால் மாண்பை இழக்கவில்லை - திருத்தந்தை


டிச.01,2008. சிறைக் கைதிகள் தங்கள் சுதந்திரத்தை இழக்கின்றனர், ஆனால் மாண்பை இழக்கவில்லை, எனவே அவர்கள் தங்களது அடிப்படை உரிமைகளை இன்னும் கொண்டுள்ளார்கள் என்று இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இலத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளில் சிறைக் கைதிகளுக்கு மேய்ப்புப் பணி என்ற தலைப்பில் கடந்த வாரத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

சிறைக் கைதிகளின் அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் மற்றும் அவர்கள் சமுதாயத்தில் மீண்டும் இணைவதற்கு மறுகல்வியும் மறுவாழ்வும் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இன்னும், கைதிகள் தனிமையை உணர வேண்டாம் என்றும், தமது மீட்புக்கான வாக்குறுதிகளில் பிரமாணிக்கமாக இருக்கும் நம் ஆண்டவரில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அழைப்புவிடுத்த திருத்தந்தை, அவர்களுடன் தான் ஆன்மீக ரீதியில் ஒன்றித்திருப்பதையும் அவர்களுக்கானத் தனது செபத்தையும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.